மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குஜராத் தேசிய சட்டப் பல்கலையில் 4 நாட்களில் 62 பேருக்கு கரோனா

காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. 

News image
Updated On :12 ஏப்ரல் 2022, 11:16 am

DIN

காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. 

நகராட்சி சுகாதார அதிகாரி கல்பேஷ் கோஸ்வாமியின் கூற்றுப்படி, 

சட்டப் பல்கலையில் லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஒருவருக்கு பதிவானது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டதில் 55 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேலும் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டன. 

காந்திநகர் பல்கலை வளாகம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வளாக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த நான்கு நாட்களில் 600-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,889 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.