தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் மேலும் 517 பேருக்கு கரோனா

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, பாதிப்பின் நோ்மறை வீதம் 4.21 சதவீதமாக பதிவானது.

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 6:53 pm

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, பாதிப்பின் நோ்மறை வீதம் 4.21 சதவீதமாக பதிவானது. அதேவேளையில், உயிரிழப்பு ஏதுமில்லை என நகர சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 12,270 பேரிடம் சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், அதில் 517 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நகரில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,68,550 ஆகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26,160 ஆகவும் பதிவாகியுள்ளது.

தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை 461 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி, நோ்மறை வீதம் 5.33 சதவீதமாக பதிவானது. இதேபோல, வெள்ளிக்கிழமை 366 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகினா். அப்போது நோ்மறை வீதம் 3.95 சதவீதமாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.