கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வடக்கு கோவாவில் விரைவில் வருகிறது மின்னணு உற்பத்தி மையம்: அமைச்சர்

கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தியுள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கௌண்டே தெரிவித்தார். 

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 11:43 am

கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தியுள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கௌண்டே திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவித்ததாவது, 

கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மின் வாகனங்கள் அல்லது மொபைல் போன்களை மையமாகக் கொண்டு மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா மேற்கொண்டு வருகின்றது. 

வடக்கு கோவாவின் பெர்னெம் தாலுகாவில் உள்ள டீயுமில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். 

மோபாவில் கட்டப்படும் புதிய விமான நிலையத்திற்கு அருகில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.