விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2022, 12:14 pm IST

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எல்லையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, கர்னா காவல் நிலையத்தின் அதிகாரி முதாசர் அகமது மற்றும் துணை ஆணையர் தலைமையிலான ஒரு குழு, உள்ளூர் ராணுவ பிரிவினருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

தாத் கர்னாவைச் சேர்ந்த ஹஜாம் மொஹல்லாவிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகள், 17 கைத்துப்பாக்கிகள், 54 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 5 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெரும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கடத்தப்பட்ட புதிய ஆயுதங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.