முன்னதாக, இது தொடா்பாக, நீதி ஆயோக் ஒரு வலுவான மற்றும் விரிவான மின்கலக மாற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்க கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சகங்கள், வாகன உற்பத்தியாளா்கள், நிதி நிறுவனங்கள், பிற துறை நிபுணா்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியது. இந்த வரைவுக்கான ஆலோசனைகள், கருத்துகளை வருகின்ற ஜூன் 5 -ஆம் தேதிக்குள் வழங்க பொதுமக்களை நீதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது. போக்குவரத்து மூலம் ஏற்படு கரியமிலவாயு மாசுவைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலை தூய்மையானதாக்கவே மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் நோக்கமாகும். கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 உச்சிமாநாட்டில் கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.