மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடல் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது

மார்ச் 2022-ல் முடிவடைந்த நிதியாண்டில் 99 லட்சத்திற்கும் அதிகமான அடல் பென்ஷன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஏப்ரல் 2022, 12:27 pm

DIN

புது தில்லி: மார்ச் 2022-ல் முடிவடைந்த நிதியாண்டில் 99 லட்சத்திற்கும் அதிகமான அடல் பென்ஷன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 4.01 கோடியாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

71 சதவீதம் பொதுத்துறை வங்கிகளாலும், 19 சதவீதம் பிராந்திய கிராமப்புற வங்கிகளாலும், 6 சதவீதம் தனியார் துறை வங்கிகளாலும், 3 சதவீதம் பணம் மற்றும் சிறு நிதி வங்கிகளாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, அடல் பென்ஷன் யோஜனாவின் (ஏபிஒய்) மொத்த பதிவுகளில், கிட்டத்தட்ட 80 சதவீத சந்தாதாரர்கள் ரூ.1000 ஓய்வூதியத் திட்டத்தையும், 13 சதவீதம் பேர் ரூ.5000 ஓய்வூதியத் திட்டத்தையும் தேர்வு செய்துள்ளனர்.

மொத்த ஏபிஒய் சந்தாதாரர்களில், 44 சதவீதம் பேர் பெண் சந்தாதாரர்கள் மற்றும் 56 சதவீதம் பேர் ஆண் சந்தாதாரர்கள். மேலும், மொத்த ஏபிஒய் சந்தாதாரர்களில், 45 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடல் பென்ஷன் யோஜனா என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாகும். 18-40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் எவரும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் சேர  இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.