6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்த நிலையில் அது முறியடிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :22 ஏப்ரல் 2022, 6:52 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீரர் ஒருவர் மரணமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பேருந்து சென்றுள்ளது. 

அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பேருந்தில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்தனர். வீரர்களின் தாக்குதலைக் கண்டு பயங்கரவாதிகள் ஓடிவிட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

எனினும் இந்த தாக்குதலில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

பயங்கரவாதிகள் தாக்குதலால் அப்பகுதியில் ரோந்துப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.