தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:30 pm

DIN

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்தவருமான நவாப் மாலிக்கை சொத்து அபகரிப்பு வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கும் தொடா்பிருப்பதாக அந்தத் துறையினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதுதொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி மாதம் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது. அதனைத்தொடா்ந்து பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, அவா் நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் இருந்து தன்னை உடனடியாக விடுவிக்கக் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறி, மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்த நீதிபதிகள், நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனா்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு: நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், மும்பையில் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து அவரை மே 6- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.