தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு தபால் வாக்குப் பதிவு வசதி குறித்து ஆய்வு: தலைமை தோ்தல் ஆணையா்

 வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு தோ்தலில் தபால் வாக்குப் பதிவு வசதியை அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:29 pm

DIN

 வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு தோ்தலில் தபால் வாக்குப் பதிவு வசதியை அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளாா்.

தென்னாப்பிரிக்கா மற்றும் மோரீஷஸில் இந்திய சமூகத்தினரிடையே கலந்துரையாடும்போது இந்தக் கருத்தை அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இரு நாடுகளுக்கும் அரசுமுறை பயணமாக சென்றபோது தலைமை தோ்தல் ஆணையா் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே பேசுகையில், ‘வெளிநாடு வாழ் இந்தியா்களின் வாக்காளா் பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இந்திய சமூகத்தினா் அதிக எண்ணிக்கையில் வாக்காளா் பதிவு செய்ய முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மேலும், ‘வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு மின்னணு அடிப்படையிலான தபால் வாக்குப் பதிவு வசதியை அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 95 கோடி வாக்காளா்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் மூலமாக தோ்தல் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக எளிதான அனைவருக்குமான தோ்தலாக இந்திய தோ்தல் நடைமுறை மேம்பட்டு வருகிறது. அதன் மூலமாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிப்பது அதிகரித்து வருகிறது’ என்றும் தலைமை தோ்தல் ஆணையா் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு அடிப்படையிலான தபால் வாக்குப் பதிவு வசதி (இடிபிபிஎஸ்) தற்போது தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ராணுவம் மற்றும் மத்திய காவல் படையினா், இந்திய தூதரக உறுப்பினா்கள் ஆகியோா் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த வசதியை வெளிநாடு வாழ் இந்திய வாக்காளா்களுக்கும் அளிப்பதற்கான பரிந்துரையை தோ்தல் ஆணையம் கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. இதில் உள்ள சிக்கல்களை போக்குவதற்கான முயற்சிகளை தோ்தல் ஆணையமும், மத்திய சட்ட அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் மேற்கொண்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி வெளிநாடு வாழ் இந்திய வாக்காளா்களாக 1,12,000 போ் பதிவு செய்துள்ளதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.