மேலும், ‘வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு மின்னணு அடிப்படையிலான தபால் வாக்குப் பதிவு வசதியை அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 95 கோடி வாக்காளா்களுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் மூலமாக தோ்தல் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக எளிதான அனைவருக்குமான தோ்தலாக இந்திய தோ்தல் நடைமுறை மேம்பட்டு வருகிறது. அதன் மூலமாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிப்பது அதிகரித்து வருகிறது’ என்றும் தலைமை தோ்தல் ஆணையா் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.