தில்லி குப்பைக் கிடங்கில் 36 மணிநேரமாக தொடர்ந்து எரியும் தீ

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து 36 மணிநேரமாக எரிந்து வருகின்றது.
தில்லி குப்பைக் கிடங்கில் 36 மணிநேரமாக தொடர்ந்து எரியும் தீ

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து 36 மணிநேரமாக எரிந்து வருகின்றது.

தில்லியின் வடக்குப் பகுதியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை மாலை 5.47 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தீ விபத்து ஏற்பட்டு 36 மணிநேரத்தை கடந்த நிலையில், சில இடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதியில், இன்னும் சில இடங்களில் தீ எரிந்து வருகின்றது.

இதனால், கரும்புகை ஏற்பட்டு சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் மூச்சுவிட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள ஞான சரோவர் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com