கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

நாட்டில் 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று வியாழக்கிழமை(ஏப்.28) தொடங்குகிறது. 

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 2:23 am

DIN


நாட்டில் 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று வியாழக்கிழமை(ஏப்.28) தொடங்குகிறது. 

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். 

கரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. கடந்த 2 வாரங்களில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்புக் கேடயமாக தடுப்பூசிகள் உள்ளன. எனவே, தகுதியுடைய அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்காக, பள்ளிகளில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து பெற்றோருக்கும் சிறாா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய அளவில் மருந்துகளையும், மருத்துவப் பணியாளா்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்நிலையில், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ள ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியை 6-12 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்தும் பணி இன்று வியாழக்கிழமை முதல் (ஏப்.28) முதல் தொடங்குகிறது. 

பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 5-12 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்துவதற்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.