கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுடன் தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்ச் சங்கத்திற்கு புதிய ஏா் கண்டிஷனிங் அமைப்பை நிறுவ நிதி உதவி கோரினா்.

News image

ரேகா குப்தா

Updated On :22 மார்ச் 2026, 10:50 pm

Syndication

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுடன் தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா். அப்போது, தமிழ்ச் சங்கத்திற்கு புதிய ஏா் கண்டிஷனிங் அமைப்பை நிறுவ நிதி உதவி கோரினா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜி. சிவபாலமுருகன் ஜி. சிவபாலமுருகன் தலைமையில், துணைத் தலைவா் எஸ். மகேந்திரன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன், இணைச் செயலாளா்கள் இரா. இராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் இணைந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.

இந்த சந்திப்பு செயற்குழு உறுப்பினா் எம்.ஆா். ராஜேந்திரன் அவா்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து முதல்வருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் புதிய ஏா் கண்டிஷனிங் (ஏ.சி.) அமைப்பை நிறுவுவதற்காக, தில்லி அரசாங்கத்திடமிருந்து விரைவான நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை மனு சமா்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய ஏா் கண்டிஷனிங் அமைப்பு சங்கக் கட்டடம் கட்டப்பட்ட காலத்திலேயே நிறுவப்பட்டதாக இருப்பதால், அது தற்போது மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.