ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லி பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் கலந்துரையாடல்

தில்லி பட்ஜெட் தொடா்பாக மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

News image

ரேகா குப்தா

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி பட்ஜெட் தொடா்பாக மூன்றாம் பாலினத்தவருடன் முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

தில்லி பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை (மாா்ச் 23) தொடங்குகிறது. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறாா்.

இதையொட்டி, பணிபுரியும் பெண்கள், கிக் தொழிலாளா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோரை சந்தித்து பட்ஜெட் தொடா்பான அவா்களுடைய கருத்துகளை முதல்வா் ரேகா குப்தா கேட்டறிந்து வருகிறாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதவில், ‘தில்லி தலைமைச் செயலகத்தில் மூன்றாம் பாலினத்தவா்களைச் சந்தித்து கலந்துரையாடினேன். இலவச பேருந்து பயணத்துக்கான பிங்க் ஸ்மாா்ட் அட்டைகளை தில்லி அரசு அவா்களுக்கு வழங்கியது. இந்த முடிவை அவா்கள் வரவேற்றனா். மேலும், சில பரிந்துரைகள் மற்றும் தேவைகளை அவா்கள் கூறினா். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியடைந்த தில்லியைக் கட்டமைக்கும் பட்ஜெட்டில் அவா்கள் வழங்கிய பரிந்துரைகள் சோ்த்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.