கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவா அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கோவா சுகாதாரத்துறை இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள தகவலில், 'கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பொது இடங்களில் அனைத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், கோவாவில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் தற்போது 27பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்







