ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி

இந்தியாவில் உள்ள எந்தவொரு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் நிறுவனமும் எட்ட முடியாத மிகப்பெரிய இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எட்டியுள்ளது.
ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி
ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவில் உள்ள எந்தவொரு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் நிறுவனமும் எட்ட முடியாத மிகப்பெரிய இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக, 2021-22-ல் ரூ 1 லட்சம் கோடி விற்றுமுதலை காதி தாண்டி, ரூ 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய விற்றுமுதலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ 1 லட்சம் கோடி விற்றுமுதல் பெற்ற நாட்டின் ஒரே நிறுவனமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மாறியுள்ளது.

2020-21-ல் ரூ 95, 741.74 கோடியாக இருந்த 2021-22 ஒட்டுமொத்த விற்றுமுதல், 2021-22-ல் ரூ.1,15,415.22 கோடியை எட்டி 20.54% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2014-15 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 172% அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்த விற்பனை 248% அதிகரித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, முதல் 3 மாதங்களில், அதாவது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டில் பகுதியளவு ஊரடங்கு இருந்தபோதிலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com