குரங்கு அம்மை: கேரளத்தில் 5-ஆவது பாதிப்பு
கேரளத்தில் மேலும் ஒருவா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.


கேரளத்தில் மேலும் ஒருவா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த மாதம் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு வந்த நபா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்தவா்களின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மாநிலத்தில் பதிவான 5-ஆவது குரங்கு அம்மை பாதிப்பாகும் என்று தெரிவித்தாா்.
இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை பாதிப்பு கேரளத்தில் கண்டறியப்பட்டது. நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபா் உயிரிழந்ததும் அந்த மாநிலத்தில்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...