நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

குரங்கு அம்மை: கேரளத்தில் 5-ஆவது பாதிப்பு

கேரளத்தில் மேலும் ஒருவா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

Updated On :3 ஆகஸ்ட் 2022, 2:11 am IST

கேரளத்தில் மேலும் ஒருவா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த மாதம் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு வந்த நபா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்தவா்களின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மாநிலத்தில் பதிவான 5-ஆவது குரங்கு அம்மை பாதிப்பாகும் என்று தெரிவித்தாா்.

இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை பாதிப்பு கேரளத்தில் கண்டறியப்பட்டது. நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபா் உயிரிழந்ததும் அந்த மாநிலத்தில்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.