எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பம்பையில் வெள்ளம்: சபரிமலைக்குச் செல்ல தற்காலிகமாக தடை!

கேரள மாநிலம் பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

News image
சபரிமலை ஐயப்பன் கோயில்
Updated On :4 ஆகஸ்ட் 2022, 11:42 am

DIN

கேரள மாநிலம் பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலைக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  

பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் யாரும் மலையேறக்கூடாது என்றும் மாலை 6 மணிக்குள் சன்னிதானத்தில் இருப்பவர்கள் கீழே இறங்கிவிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

நிறை புத்தரிசி நிகழ்ச்சிக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.