பெண்களை முன்னேற விடால் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் தரம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனின் பல்வேறு நலத்திட்டங்களை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், சமுதாயத்தை சிறப்பாக மாற்ற பெண்கள் கல்வி கற்பது முக்கியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்கள் இருந்துள்ளனர். பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க.. அந்த ஒருநாள்: ஞாயிறன்று என்ன செய்ய வேண்டும்? உழைப்பா? ஓய்வா?
இந்த நிகழ்ச்சியின்போது, ஸ்ரீமத் ராஜ்சந்திரா மருத்துவமனையையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். 250 படுக்கை வசதியுடன் கூடிய இந்த மருத்துவனை ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ளது. குஜராத் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதியை இது தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.