சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பெங்களூரு: 4வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற தாய் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையைப் பெற்ற தாயே 4வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெங்களூவில் அரங்கேறியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

DIN

மனநலம் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தையைப் பெற்ற தாயே 4வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூர சம்பவம் பெங்களூவில் அரங்கேறியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூவில் உள்ள சம்பங்கிராமநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 4) நிகழ்ந்துள்ளது. குழந்தையை வீசிக் கொன்ற பிறகு தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறை விசாரணை மேற்கொள்ள மருத்துவமனைக்கு விரைந்தது. காவல் துறை விசாரணையில் குழந்தை மாடிப் படியில் இருந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மை அவர்களுக்கு கிடைத்தது. குழந்தையை தாய் தெரிந்தே 4வது மாடியில் இருந்து தூக்கி வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல் துறை அவரை கைது செய்தது.

இது குறித்து பெங்களூரு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாஸ் கௌதா கூறியதாவது: “ மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை தாயே மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் தாய் ஒரு பல் மருத்துவர். ஆனால், அவர் தற்போது மருத்துவம் பார்க்கவில்லை. குழந்தையின் தந்தை ஒரு மென்பொறியாளர் ஆவார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே காவல் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.