மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோ

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 12:32 pm

DIN

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

இந்த செயற்கைக் கோளினை இஸ்ரோ சென்னையில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்புகிறது. 

பிஎஸ்எல்வி (PSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) செயற்கைக் கோள் ஊர்திகளின் மூலம் பல செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தி என பிஎஸ்எல்வி-யினைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. அந்த வரிசையில் சிறிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தியும் இணைய உள்ளது. 

விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும். பிஎஸ்எல்வி செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளைக் காட்டிலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி 10 மீட்டர் குறைந்த நீளம் கொண்டது. பிஎஸ்எல்வி ஊர்தியின் நீளம் 44 மீட்டராக இருக்க இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியின் நீளம் 34 மீட்டரே ஆகும். அதேபோல அகலத்திலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி சற்று குறைவாகவே உள்ளது. பிஎஸ்எல்வி 320 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியால் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும்.
 

இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியினைக் கொண்டு நாளை (ஆகஸ்ட் 7) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ சார்பில் மற்ற செயற்கைக் கோள்கள் ஊர்திகளில் ஏவப்படுவதற்கு 25 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திக்கு 5 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை காலை 4.18 மணி முதல் நேரக் குறைப்பு தொடங்கி சரியாக காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் முதல் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.