மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியின் கண்காணிப்பாளர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பத்ராவதி தாலுகாவில் பரஞ்ச் தண்டா கிராமத்தில் உள்ள காமாபாய் ஆசிரமப் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோரிடம், தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவளை அழைத்துச் செல்லும் படியும், இடமாற்றச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி கண்காணிப்பாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிகங்காட் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பின்னர் வழக்கு பத்ராவதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாக்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கவால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 376யின் படி போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமையலில் இதெல்லாம் கூடவே கூடாது..!

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: இன்று கடைசி நாள்!

அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

