திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மகாராஷ்டிரம்: பள்ளி அதிகாரியால் மாணவி பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியின் கண்காணிப்பாளர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 3:43 pm IST

மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியின் கண்காணிப்பாளர் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பத்ராவதி தாலுகாவில் பரஞ்ச் தண்டா கிராமத்தில் உள்ள காமாபாய் ஆசிரமப் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆகஸ்ட் 4ஆம் தேதி பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோரிடம், தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவளை அழைத்துச் செல்லும் படியும், இடமாற்றச் சான்றிதழையும் வழங்கியுள்ளனர். 

பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி கண்காணிப்பாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிகங்காட் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பின்னர் வழக்கு பத்ராவதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாக்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கவால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 376யின் படி போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.