கோவாவில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது.
தில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சி புரிந்துவரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,
தில்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்.
ஒவ்வொரு தொண்டரின் கடின உழைப்பிற்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குஜராத் தேர்தலில் தீவிரம் காட்டும் ஆம் ஆத்மி! கேஜரிவால் நாளை பயணம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

