பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

குஜராத் தேர்தலில் தீவிரம் காட்டும் ஆம் ஆத்மி! கேஜரிவால் நாளை பயணம்

தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து வரவுள்ள குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:31 pm IST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை குஜராத் செல்லவிருக்கிறார். 

தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து வரவுள்ள குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது.

இதையொட்டி, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அடிக்கடி குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வரும் அவர், இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார். 

இந்நிலையில், நாளை(புதன்கிழமை) அவர் குஜராத்தில் பலன்பூரில் உள்ள டவுன் ஹாலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளதாக குஜராத் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி தெரிவித்துள்ளார். 

கடந்த 4 மாதங்களில் கேஜரிவால் குஜராத் செல்வது 10 ஆவது முறையாகும். முன்னதாக கடந்த சனிக்கிழமை அவர் குஜராத் சென்றிருந்தார். 

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் வரவுள்ளதால் ஆம் ஆத்மி தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது. 

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல், ஆளும் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என்று கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.