மகாராஷ்டிரத்தின் புதிய அமைச்சர்களுக்கு மோடி வாழ்த்து

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 18 அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை வாழ்த்தி மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மகாராஷ்டிர அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த குழு, கலவையான நிர்வாக அனுபவம் மற்றும் நல்லாட்சி வழங்கும். மாநில மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் அமைச்சரவைக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அமைச்சர்களாக பாஜகவின் 9 எம்.எல்.ஏ.க்களும், சிவசேனையின் 9 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com