கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பும் பலியும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் 11 நாள்களில் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மாநிலத்தில் காரோனா தொற்றால் 1,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 1,225 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளன.
அதிகரித்துவரும் கரோனா நோய்த் தொற்றுகளை சமாளிக்க, மாநில அரசு வெள்ளிக்கிழமை இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைத் தொடங்கியது.
சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி,
ஏப்ரலில் 5, மே மாதத்தில் 6, ஜூன் மாதத்தில் 10 மற்றும் ஜூலையில் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் முதல் 11 நாள்களில் 30 பேர் கரோனா காரணமாக இறந்துள்ளனர்.
மாநிலத்தில் கொடிய நோய்க்கு இதுவரை 40,134 பேர் பலியாகி உள்ளனர். இதன் நேர்மறை விகிதம் 6.09 சதவீதமாகவும், சிகிச்சையில் 10,054 பேரும் உள்ளனர்.
இந்த வாரம் கரோனாவுக்கு 20 வயது பெண் மற்றும் 60 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் எந்தவிதமான நோய்களும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


