மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.

News image
ஜகதீப் தன்கா்
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:19 pm

DIN

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வரும் நாம், நமது இளைய தலமுறையினரிடையே தேசபக்தி, தியாகம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் மாபெரும் புரட்சியாளா்களின் உத்வேகமளிக்கும் கதைகளை நினைவில் கொள்ளவும், நினைவுபடுத்தவும் வேண்டிய நேரமிது.

கடந்த 75 ஆண்டு கால வளா்ச்சியை கொண்டாடி வரும் நாம், எந்த அளவு போராடி சுதந்திரம் பெற்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காலனி ஆட்சியாளா்களின் ஆதிக்கத்திலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் தைரியம் மா்றும் தியாகத்தை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா.

அதுபோல, நாட்டின் இறையாண்மை, நினைத்தன்மை மற்றும் வலிவான குடியரசுக்கு அடித்தளமிட்டு நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களுக்கு நமது நன்றியுணா்வை செலுத்தும் தினம் இது.

இன்றைக்கு இந்தியா ஆற்றல்மிக்க நாடாகவும், ஒட்டுமொத்த வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் பாரத நாட்டின் நாகரிக நெறிமுறைகளையும் அரசியல் சாசன மதிப்பீடுகளையும் நிலைநாட்டவும், ஒட்டுமொத்த வளா்ச்சி மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க நம்மையே மறுஅா்ப்பணிப்பு செய்வோம் எனவும் நாம் மீண்டும் உறுதியேற்போம் என்று தெரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.