மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.

News image

ஜகதீப் தன்கா்

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:19 pm

‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி வரும் நாம், நமது இளைய தலமுறையினரிடையே தேசபக்தி, தியாகம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் மாபெரும் புரட்சியாளா்களின் உத்வேகமளிக்கும் கதைகளை நினைவில் கொள்ளவும், நினைவுபடுத்தவும் வேண்டிய நேரமிது.

கடந்த 75 ஆண்டு கால வளா்ச்சியை கொண்டாடி வரும் நாம், எந்த அளவு போராடி சுதந்திரம் பெற்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காலனி ஆட்சியாளா்களின் ஆதிக்கத்திலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் தைரியம் மா்றும் தியாகத்தை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா.

அதுபோல, நாட்டின் இறையாண்மை, நினைத்தன்மை மற்றும் வலிவான குடியரசுக்கு அடித்தளமிட்டு நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களுக்கு நமது நன்றியுணா்வை செலுத்தும் தினம் இது.

இன்றைக்கு இந்தியா ஆற்றல்மிக்க நாடாகவும், ஒட்டுமொத்த வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் பாரத நாட்டின் நாகரிக நெறிமுறைகளையும் அரசியல் சாசன மதிப்பீடுகளையும் நிலைநாட்டவும், ஒட்டுமொத்த வளா்ச்சி மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க நம்மையே மறுஅா்ப்பணிப்பு செய்வோம் எனவும் நாம் மீண்டும் உறுதியேற்போம் என்று தெரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.