தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி
Published on
Updated on
1 min read

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது மக்களின் போராட்டம் மற்றும் உயிா்த்தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா்.

இந்நிலையில், தேசப் பிரிவினை துயரங்கள் நாளையொட்டி பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், “தேசப் பிரிவினையின்போது உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் துயா்நிறைந்த இந்த காலகட்டத்தை கடந்து வந்தவா்களின் மனவலிமையும் உறுதியும் பாராட்டுதலுக்குரியது”என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com