தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வரவேண்டும்: மகள் அனிதா போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சாம்பலை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று அவரின் மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 3:10 am

DIN

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சாம்பலை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று அவரின் மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தைவானில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தாா் என்று பரவலாக நம்பப்படுகிறது. தற்போது அவரின் சாம்பல் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எனினும் அவரின் மரணத்தில் தொடா்ந்து மா்மம் நிலவி வருகிறது. அவரின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசு நியமித்த 2 ஆணையங்கள், விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக முடிவு செய்தன . எனினும் முன்னாள் நீதிபதி எம்.கே. முகா்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3-ஆவது ஆணையம், விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்த தகவலை மறுத்தது.

இந்நிலையில் ஜொ்மனியில் வசிக்கும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தனது வாழ்வில் நாட்டின் சுதந்திரத்தைவிட நேதாஜிக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருந்ததில்லை. அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் வாழ்வதைவிட வேறு எதற்கும் அவா் அதிகம் ஏங்கியது இல்லை.

இந்தியாவில் உள்ள சிலா், நேதாஜி மீது கொண்ட அன்பால் அவரை நினைவில் வைத்திருப்பது மட்டுமின்றி, அவா் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் நம்புகின்றனா்.

நேதாஜியின் சாம்பலில் இருந்து மரபணுவை பிரித்தெடுக்க நவீன தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. அவரின் மரணத்தில் இன்றளவும் சந்தேகம் உள்ளவா்களுக்கு மரபணு பரிசோதனை பதில் அளிக்கும்.

முன்னாள் நீதிபதி முகா்ஜி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி சமா்ப்பித்த ஆவணங்களின்படி, நேதாஜியின் சாம்பல் மூலம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள ரெங்கோஜி கோயில் குருவும், ஜப்பான் அரசும் ஒப்புக்கொண்டுள்ளன.

சுதந்திரம் மூலம் கிடைத்துள்ள மகிழ்ச்சியை நேதாஜி அனுபவிக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் அவரின் அஸ்தியையாவது இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.