உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புடைய கேட்பரி சாக்லேட் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள அருகே சின்ஹாட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து 17 ரூபாய் லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட் பார்கள் திருடு போயுள்ளன.
திங்கள் நள்ளிரவு அன்று இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, யாராவது திருடியிருந்தால் தயவுசெய்து முன்வந்து திருடியதை திருப்பி கொடுத்துவிடும்படி சாக்லேட் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து கேட்டுக்கொண்டுள்ளார்.
சாக்லேட்டுகளை சேமித்து வைப்பதற்காக தன் வீட்டை குடோனாகப் பயன்படுத்துவதாகவும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தனது பக்கத்து வீட்டுக்காரர் செவ்வாயன்று தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் சித்து கூறினார்.
மர்ம நபர்கள் சாக்லேட்டைத் திருடியதுடன் வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி கேமராக்களின் பிற உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


