

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,
நிலநடுக்கமானது பித்தோராகரில் இருந்து 43 கீ.மீட்டரில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகவும், இதன் நீளம் 80.12 ஆகவும், 5 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும், பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்மேற்கில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ன்சிஎஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.