புது தில்லி: நாட்டில் முக்கிய மெட்ரோ நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக 24 உள்நாட்டு விமானங்களை இன்று முதல் இயக்கவிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
பெரும்பாலான ரயில்கள் தில்லி - மும்பை, பெங்களூரு - ஆமதாபாத், மும்பை - சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மும்பை - பெங்களூரு மற்றும் ஆமதாபத் - புணே இடையே புதிய வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்து.
புதிதாக 24 விமானச் சேவைகள் தொடங்குவது குறித்து ஏர் இந்தியா பொது மேலாளர் மற்றும் தலைமைஅதிகாரி கேம்பெல் வில்சன் கூறுகையில், முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக உள்நாட்டுச் சேவையை அதிகரிக்கும் முயற்சியாக இது அமையும். கடந்த ஆறு மாதங்களாக ஏர் இந்தியா தனது கூட்டாளிகளுடன் மிக நெருங்கிப் பணியாற்றி வருகிறது. தற்போது அதற்கான பலன் கிடைத்து வருவதாகக் கூறுகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக 70 விமானங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 54 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. மற்ற 16 விமானங்களும் 2023ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


