காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது 

காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

காரின் மீது மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தாக்கப்பட்ட வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கேரள கலை இயக்குநர் அர்கன் எஸ் கர்மா தனது காரில் தேசிய மூவர்ண கொடியை ஒட்டியுள்ளார். இதற்கு எதிர்வினையாக ஆக.15 நள்ளிரவு ஒரு மணிக்கு 4 நபர்கள் பள்ளிமுக்கு தேசிய நெடுஞ்சாலை 64இல் அவரது காரை நிறுத்தி கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது இது குறித்து கேரள காவல்துறையினர் கூறியதாவது: 

கலை இயக்குநர் தனது காரில் மூவர்ண கொடியை ஒட்டியதற்காக கொல்லம் மாவட்டத்தில் ஆக.15 அன்று தாக்கிய 2 நபர்களை கைது செய்துள்ளோம். முதன்மை குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட நபரின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்ட இன்னொரு நபர் இரண்டு முறை கன்னத்தில் அறைந்துள்ளார். பிறகு காரில் இருந்து வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கல்லை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் அர்கன் எஸ் கர்மாவுக்கு தலை மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com