முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு என் அஞ்சலிகள்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | ராஜீவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை