தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூல்

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான கட்டண பாக்கி ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஆகஸ்ட் 2022, 1:16 pm IST

புதி தில்லி: மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை  பகிர்ந்து கொள்ள ஆகஸ்ட் 18 இரவு முதல் மின்பகிர்மான அமைப்பு தடை விதித்திருந்தது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்கத தடை விதிக்கப்பட்டது

மின்உற்பத்தி நிறுனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி, மின்சாரத்தை வாங்க மற்றும் விற்க 13 மாநிலங்களுக்கு மின்பகிர்மான அமைப்பு தடைவிதித்தது.

13 மாநிலங்கள் மின்பகிர்மானத்திற்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறியதாக, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு மின்பகிர்மான அமைப்பு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.   13 மாநிலங்களின் நிலுவைத் தொகை ரூ.5100 கோடியில் இருந்து ரூ.1037 கோடியாக குறைந்துள்ளது.

தடை அமலான ஓரே நாளில் பீகார், மணிப்பூர், ஜார்கண்ட், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் கட்டணம் செலுத்திவிட்டதால், உடனடியாக தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.