மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூல்

மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான கட்டண பாக்கி ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:46 am

புதி தில்லி: மாநிலங்களின் மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை  பகிர்ந்து கொள்ள ஆகஸ்ட் 18 இரவு முதல் மின்பகிர்மான அமைப்பு தடை விதித்திருந்தது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்கத தடை விதிக்கப்பட்டது

மின்உற்பத்தி நிறுனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி, மின்சாரத்தை வாங்க மற்றும் விற்க 13 மாநிலங்களுக்கு மின்பகிர்மான அமைப்பு தடைவிதித்தது.

13 மாநிலங்கள் மின்பகிர்மானத்திற்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறியதாக, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு மின்பகிர்மான அமைப்பு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  மின்பகிர்மானத்திற்கான நிலுவைத் தொகை ஒரே நாளில் 80% வசூலாகியுள்ளது.   13 மாநிலங்களின் நிலுவைத் தொகை ரூ.5100 கோடியில் இருந்து ரூ.1037 கோடியாக குறைந்துள்ளது.

தடை அமலான ஓரே நாளில் பீகார், மணிப்பூர், ஜார்கண்ட், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் கட்டணம் செலுத்திவிட்டதால், உடனடியாக தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.