இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி விவசாயிகள் இன்று போராட்டம்: எல்லைகளில் காவல்துறையினர் குவிப்பு

தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

News image
தில்லியில் விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
Updated On :22 ஆகஸ்ட் 2022, 5:59 am

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. 

இதையடுத்து தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 

இதன் காரணமாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதி மற்றும் தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தில்லி எல்லைகளில் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லை, சிங்கு எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.