தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதி மற்றும் தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தில்லி எல்லைகளில் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் எல்லை, சிங்கு எல்லையில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானுக்கு விரைவில் பதிலடி; தயார்நிலையில் ராணுவம்! - அஜர்பைஜான் அறிவிப்பு!

முதல்வர் நிதீஷ்குமார் ராஜிநாமா? வீட்டின்முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் திருப்பி செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

