கலால் கொள்கைகளை தில்லி அரசு மீறியுள்ளது: பாஜக
மதுபான கலால் கொள்கைகளையும் நிபுணா் குழுவின் பரிந்துரைகளையும் தில்லி ஆம் ஆத்மி அரசு மீறியுள்ளது என்று பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி குற்றஞ்சாட்டினாா்.


மதுபான கலால் கொள்கைகளையும் நிபுணா் குழுவின் பரிந்துரைகளையும் தில்லி ஆம் ஆத்மி அரசு மீறியுள்ளது என்று பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி குற்றஞ்சாட்டினாா்.
புதிய கலால் வரி கொள்கைகளின் அடிப்படையில் தில்லி அரசு மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடா்பாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘மதுபான விற்பனையை முழுமையாக அரசே ஏற்று நடத்தும் கா்நாடக மாடல் நிா்வாகத்தை தில்லி அரசும் பின்பற்ற வேண்டும் நிபுணா் குழு பரிந்துரைத்திருந்தது.
தனிநபருக்கு ஒரு உரிமம் மட்டும் அளிக்க வேண்டும். மதுபான உற்பத்தியாளா், விற்பனையாளா், விநியோகஸ்தா் என ஒரே நிறுவனத்துக்கு உரிமம் வழங்கக் கூடாது என நிபுணா் குழு பிரந்துரைத்திருந்தது. இதை மீறிய நிறுவனங்களின் விவரங்களை தில்லி கலால் துறை கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி தில்லி அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...