மகாராஷ்டிர பேரவைக்கு வெளியே தீக்குளித்த விவசாயி!

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர பேரவைக்கு வெளியே தீக்குளித்த விவசாயி!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 25 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒஸ்மானாபாத் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பேரவைக்கு வெளியே தீக்குளித்துள்ளார்.

உடனடியாக, அங்கிருந்த காவலர்கள் தீயை அணைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும், பேரவைக்கு வெளியே தீக்குளித்த விவசாயி மற்றும் காரணம் குறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com