தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக வளர்ச்சியடைந்திருப்பது முதல்வர் சந்திரசேகர் ராவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியதாக விடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனை. இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை காவல் துறையினர் கைது செய்தனர்.
காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரின் அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில தலைவர் சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சட்டவிரோதமாக பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் குமாரை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு கைது செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் தெலங்கானா மக்கள் கிளர்ந்துள்ளனர். இதனால், பாஜகவுக்கு தெலங்கானாவின் மூலைமுடுக்குகளில் கூட ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் சந்திரசேகர் ராவ் கவலை அடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



