தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டத்தில் புதன்கிழமை மீண்டும் மேக வெடிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக சிர்பாடியா கிராமத்தில் உள்ள நெல்சாமி ஆறு நிரம்பி பாசன விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 10:41 am

PTI

உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டத்தில் புதன்கிழமை மீண்டும் மேக வெடிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக சிர்பாடியா கிராமத்தில் உள்ள நெல்சாமி ஆறு நிரம்பி பாசன விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இந்த மேகவெடிப்பால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இங்குள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மூல்கர்-தர்த்தி சாலையில் உள்ள சில பாலங்கள் சேதமடைந்துள்ளன. தர்த்தி அருகே சாலை துண்டிக்கப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நெல்ச்சாமி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள், தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர்.

ஆகஸ்ட் 19 அன்று ஏற்பட்ட மேக வெடிப்புகளில், தெஹ்ரி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதுவரை மீட்கப்பட்ட மொத்த ஏழு உடல்களில் 5 மாவட்டத்தின் குவாட் மற்றும் சில்லா கிராமங்களில் கண்டெடுக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.