அக்னிபத் திட்டம் தொடா்பான மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி, தில்லி, கேரளம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா, பாட்னா, உத்தரகண்ட் உயா்நீதிமன்றங்களில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கலாகின. இந்த மனுக்களை கடந்த ஜூலை 19-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களும் தங்கள் முன் உள்ள மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவோ அல்லது தில்லி உயா்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை வழக்கை நிலுவையில் வைத்திருக்கவோ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.