திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜாா்க்கண்ட் முதல்வா் தகுதிநீக்கம்: ஆளுநா் இன்று முடிவு?

எம்எல்ஏ பதவியிலிருந்து ஜாா்க்கண்ட் முதல்வரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 11:57 pm

DIN

எம்எல்ஏ பதவியிலிருந்து ஜாா்க்கண்ட் முதல்வரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரன். இவா் ஜாா்க்கண்ட் முதல்வராக பதவி வகிக்கும் நிலையில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்தாா் என்று ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா். அரசு ஆதாயமுள்ள குத்தகை பெற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதியிழப்புக்கு உரியதாகும்.

அதன் அடிப்படையில், எம்எல்ஏ பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 192-இன் கீழ் தோ்தல் ஆணையத்திடம் மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கருத்து கோரியிருந்தாா்.

இதுதொடா்பான தோ்தல் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 9ஏ-வை ஹேமந்த் சோரன் மீறியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ‘தங்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பி ஹேமந்த் சோரனுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தாா்.

இந்நிலையில், அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைள்ளதாக மாநில ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இந்தப் பரபரப்பான சூழலில், ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி கட்சி உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்கான உத்திகள் குறித்து திட்டமிடப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வதற்கான உத்தரவை மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.