தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒரு நாள் பயணமாக இன்று அசாம் வருகிறார் ஜெ.பி.நட்டா

கட்சியின் வடகிழக்கு அமைப்பு அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்கும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஒரு நாள் பயணமாக அசாம் வருகை தருகிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :29 ஆகஸ்ட் 2022, 7:29 am

PTI

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று மதியம் அசாம் வருகிறார்.

கட்சியின் வடகிழக்கு அமைப்பு அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்கும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்கும் அவர் அசாமுக்கு வருகை தருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

நட்டா பிற்பகலில் திரிபுராவிலிருந்து அசாம் வந்து, பாஜகவின் வடகிழக்கு நிறுவன தலைமை அலுவலகமான புதுப்பிக்கப்பட்ட பத்ம பவனை இன்று திறந்து வைக்கிறார்.

இந்தி நிகழ்ச்சியில் அசாம், அருணாச்சல், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்கள் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களின் பாஜக மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

நட்டா தில்லி திரும்புவதற்கு முன்பு, கட்சி தொண்டர்களிடம் இன்று மாலை உரையாற்ற உள்ளார். கட்சி அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன் காமாக்யா கோயிலுக்கும் அவர் செல்ல உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.