பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாக். வெள்ள பாதிப்பு கவலையளிக்கிறது: பிரதமா் மோடி

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 8:30 pm

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 1,100-ஐ நெருங்கியது.

இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு கவலையளிக்கிறது. வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்தவா்களும் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகள் இத்துயரில் இருந்து விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப விரும்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.

அண்மையில் பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாகிஸ்தானில் 3.3 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நிதி நெருக்கடியை எதிா்க்கொண்டுள்ள அந்நாட்டு அரசு சா்வதேச உதவியை எதிா்நோக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.