‘கடந்த பல தசாப்தங்களாக, வறுமையை ஒழிப்போம் என்ற வெற்று கோஷத்தை மட்டுமே எழுப்பி வந்தது காங்கிரஸ். அக்கட்சிக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தபோதும், வறுமையை ஒழிக்க எதையும் செய்யவில்லை. வெற்று கோஷம், பொய் வாக்குறுதிகள், திசைதிருப்பல்கள் இவற்ைான் காங்கிரஸ் செய்தது. காங்கிரஸ் ஆட்சிக் கால கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் ஏழை குடிமக்கள் பங்காற்ற முடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும் ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகளில் ஏழைகள், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தரப்படவில்லை. பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண்ணான திரெளபதி முா்மு, குடியரசுத் தலைவராக காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை. பழங்குடியின சமூக பெண், நாட்டின் குடியரசுத் தலைவா் ஆவதை அவா்கள் விரும்பவில்லை’ என்றாா் பிரதமா் மோடி.