மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: 5 கிலோ ஹெராயின் மீட்பு!

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

News image

இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: 5 கிலோ ஹெராயின் மீட்பு!

Updated On :2 டிசம்பர் 2022, 6:23 am

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள வயலில் இருந்து 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் ஒன்று மீட்டுள்ளனர். 

இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வயல்களில் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின், நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகியவற்றை டார்ன் தரன் போலீசார் மீட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் கௌரவ் யாதவ் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 28 அன்று, அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரண்டு பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலிருந்து சுமார் 10 கிலோ ஹெராயினை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.