சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

’இந்தியா வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால்...’ - ராஜ்நாத் சிங்

இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்வில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 டிசம்பர் 2022, 3:05 pm

DIN

இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்வில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருபோதும் போர் மற்றும் வன்முறையை விரும்புவதில்லை. ஆனால், அநீதியைப் பார்த்துக் கொண்டு இந்தியாவால் நடுநிலையாகவும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அமைப்பு ஒன்றினால் பெங்களூருவின் ராஜாதிராஜா கோவிந்தா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்தியாவில் உள்ள நாங்கள் அனைவரும் அமைதியை விரும்புபவர்கள். போரும்,வன்முறையும் எங்களது வழக்கம் அல்ல. இந்தியா எந்த ஒரு நாட்டினையும் தாக்குவதும் இல்லை, எந்த ஒரு நாட்டின் இடத்தையும் சிறிதளவு கூட ஆக்கிரமிப்பதும் இல்லை. இதுதான் இந்தியாவினுடைய குணம். நாங்கள் போர் மற்றும் வன்முறையை விரும்புவதில்லை. ஆனால், அநீதியைப் பார்த்துக் கொண்டு எங்களால் நடுநிலையாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அது எங்களது குணம் கிடையாது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.