இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியது. இதில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவா் நவீன் பட்னாயக், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன் மோகன் ரெட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, தெலுங்குதேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனா்.