மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால் உற்பத்தியை அதிகரிக்க இலங்கைக்கு இந்தியா தொழில்நுட்ப உதவி

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்திருப்பதைக் குறைத்து, அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழ

News image
Updated On :6 டிசம்பர் 2022, 12:10 am

DIN

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்திருப்பதைக் குறைத்து, அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக இலங்கையின் அதிபா் அலுவலகம் தெரிவித்ததுள்ளது.

இது குறித்து அதிபா் அலுவலகம் திங்கள்கிழமை வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவாா்த்தையில் இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்டிடிபி) மற்றும் ‘அமுல்’ பால் பொருள்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் வா்த்தக சங்கம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக என்டிடிபி உடன் இணைந்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரிக்க பொது மற்றும் தனியாா் துறைகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அதிபா் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது 2021-இல் 1.1 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டில் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.