மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு: காங்கிரஸ் தலைவா் காா்கே

குளிா்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்று காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2022, 6:40 pm

DIN

குளிா்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்று காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடா் தொடங்கும் முன், தில்லியில் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், புரட்சிகர சோஷலிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து காா்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ஜனநாயக விவாதத்தின் உறைவிடமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. குளிா்கால கூட்டத்தொடரில் ஒருமித்த சிந்தனையுள்ள கட்சிகள் மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் வலுவாக எழுப்பும்.

துரிதகதியில் சட்டங்கள் இயற்றப்பட்டால், அந்தச் சட்டங்களை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யவேண்டிய நிலை ஏற்படும். எனவே, முக்கியமான அனைத்து மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதன்மூலம் அந்த மசோதாக்கள் விரிவாக ஆராயப்படும். நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் விவாதங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.