ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டம்: அடிக்கல் நாட்டிய தெலங்கானா முதல்வர்

31 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று (டிசம்பர் 9) அடிக்கல் நாட்டினார்.
ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டம்: அடிக்கல் நாட்டிய தெலங்கானா முதல்வர்
Published on
Updated on
1 min read

31 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று (டிசம்பர் 9) அடிக்கல் நாட்டினார்.

இந்த ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த திட்டத்துக்கு சுமார் ரூ. 6,250 கோடி செலவாகும் எனத் தெரிவித்தார். 

இது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது: இந்தத் திட்டம் 100 சதவிகிதம் அரசு மற்றும் ஜிஎம்ஆர் குழுமத்தினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மெட்ரோ ரயில் பயணம் மட்டுமே உலக அளவில் மாசற்ற பயணமாக உள்ளது. அத்தகைய மெட்ரோ ரயில் சேவையை ஹைதாராபாத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவோம். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் தெலங்கானா தற்போது உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது. முன்னதாக பிரிக்கப்படாமல் ஆந்திரத்துடன் ஒன்றாக இருந்தபோது மாநிலத்தில் வளர்ச்சியே இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com